Monday, May 2, 2011

Kinchitkaram - Srimad Bhagavata Krishna Anubhava Yatra 2011

Dear Adiyaars,

Kinchitkaram trust is back with another yatra for experiencing supreme bliss. This yatra includes the places pertaining to Lord Krishna's past times such as

Gokulam,
Vridhavan( Brindhavanam),
Govardhanam,
Kaamya Vanam ,
Mathura,
Nandha Gramam,
Barsana.

Departure from chennai on : 6-Oct-2011.
Dharsan and Upanyasam in yatra place : 09-Oct-2011 to 15-Oct-2011
Return to Chennai : 17-Oct-2011

Please make use of this golden opportunity to visit the historic sites and to learn Bhgavad Vishayam and receive Krishna's Blessings ! Join the Trust for regular such programs, upanyasams and a lot more from Swami Velukkudi Krishnan.

Further details :
http://www.kinchitkaramtrust.org/

Friday, April 29, 2011

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ ?

அன்று திருவாரூரில் தான் வழங்கிய தவறான தீர்ப்பால், செங்கோல் வளைந்தபோது , மனுநீதி சோழன் தான் முற்பிறவியில் என்ன பாவம் செய்தேனோ என்று அழுது புலம்பி தவிக்கிறான். அவர் காலத்து சேக்கிழார் பெருமான் தனது திருத்தொண்டர் புராணம் என்றழைக்கப்படும் பெருய புராணத்தில் இந்த வரலாறு விளக்குகிறார்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிகாலத்தில்(19 ஆம் நூற்றாண்டு) , அவர்களால் ஏவப்பட்ட ஜமின்தார்களின் கொடுங்கோல் ஆட்சி தமிழகத்தில் நிலவியது . அந்த சமுகச் சூழலில் பெரிய புராணத்தை தழுவி இராமலிங்க அடிகள் 'மனுமுறை கண்ட வாசகம்' என்ற நூலை 1854 ஆம் ஆண்டில் அச்சிட்டு வெளியிட்டார். அந்த நூலில் மனுநீதிச் சோழன் முற்பிறவியில், தான் செய்த பாவங்களாக சிலவற்றைப் பட்டியலிடுகிறான். அது நீதியையும், வள்ளலார் காலத்து நெறிமுறைகளையும் அழகாக எளிய செய்யுளில் அமைந்து நம்மை நெறிபடுதுகிறது.

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!

வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!

தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!

கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!

குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!

ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!

தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ! (8)

மண்ணோரம் பேசி வாழ் வழித்தேனோ! (9)

உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ! (10)

களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ! (11)

பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! (12)

ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ! (13)

வரவுபோக்கொழிய வழியடைத்தேனோ! (14)

வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ! (15)

பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ! (16)

இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ! (17)

கோள்சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ! (18)

நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ! (19)

கலங்கியொளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ! (20)

கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ! (21)

காவல்கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ! (22)

கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ! (23)

கருப்பமழித்துக் களித்திருந்தேனோ! (24)

குருவை வணங்கக் கூசி நின்றேனோ! (25)

குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ! (26)

கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ! (27)

பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ! (28)

பக்ஷயைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ! (29)

கன்றுக்குப்பாலு஡ட்டாது கட்டி வைத்தேனோ! (30)

ஊன்சுவையுண்டு உடல் வளர்த்தேனோ! (31)

கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ! (32)

அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ! (33)

குடிக்கின்ற நீருள்ள குளந்து஡ர்த்தேனோ! (34)

வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ! (35)

பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ! (36)

பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ! (37)

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ! (38)

சிவனடியாரைச் சீறிவைதேனோ! (39)

தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ! (40)

சுத்த ஞானிகளைத் து஡ஷணஞ் செய்தேனோ! (41)

தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ! (42)

தெய்வமிகழ்ந்து செருக்கடைந்தேனோ! (43)

என்ன பாவம் செய்தேனோ! இன்ன தென்றறியேனே! (44)
என்ன பாவம் செய்தேனோ! என்ன பாவம் செய்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ!என்ன பாவம் செய்தேனோ!

இப்படி நீதிக்கு பெயர் போன திருவாரூர் மண்ணில் பிறந்த இன்றைய திராவிட கழக தலைவர், மனுநீதி எதையெல்லாம் தன் பாவமாக புலம்பிநானோ,  அத்தனையும் மொத்தமாய் செய்து ஆட்சியை புசிக்கிறார்கள்! எத்துனை மாற்றம் இறைவா!

Wednesday, April 27, 2011

பட்டதெல்லாம் போதும்.

பட முடியா துயரம் இனி பொருக்க மாட்டேன்,
பட்டதெல்லாம் போதும்....பாவியேன் மேனி பட்டுவிட்டால் போதும் !!!

பாசமறுத்து பந்தமறுத்து கூடிய கூட்டமறுத்து கொல்வினையறுத்து
நாடிய நாட்டமறுத்து, நல்வினையறுத்து முற்றும் நின்னடியளித்து,
என்னுடல் உயிராவிஎல்லாம் நீ எடுத்து,
உன்னுடல் உயிராவிஎல்லாம் உவந்து எனக்கு நீ அருள்வாய்.!!

பொய் மேனி மேவினேன் நின் மெய்யடி புனைந்திலன்
நாடிலேன் நற்றாள், பெற்றிலேன் மெய்ஞானம் இந்நாள்
பற்றினேன் நின் பாதம் என்னுடலே உயிரே, உயிரின் உட்பொருளே
ஆவியே ஆராவமுதே அரசே அடியேனை ஆட்கொண்டருளே !!!

Thursday, March 31, 2011

Summer course in Sansrit and Sri vaishanavism in Srirangam!

Kinchitkaram Trust is organizing a summer course on Sanskrit read write and on Srivaishnava texts for all students above 10 years old. The announcement for this program was made by Swami U Ve Velukudi krishnan in Pothigai TV Kannapiran Kadaiyamuthu program telecasted Mar 31 2011. Please note the below details and contact below mentioned number for futher details.

Registration time  : 09- 11 AM or 3-5PM

Registration fee    : Rs 100

Course duration   : 45 days (April 14 to May 31)

Courre Content      : Sanskrit read write coaching , Nalayira Divya Prabhandam including Thirupallandu, amalanaadipiran, kanninin siruthaampu, Vishistadvaita siddhanta .. etc.

Venue                    : Srirangam.

Contact Details : Kinchitkaram Trust Information Center, Srirangam. Mobile : +919094788135 begin_of_the_skype_highlighting            +919094788135      end_of_the_skype_highlighting

Monday, January 10, 2011

The root of the Science is in India!

Science - The wisdom in Samskrutam literature
--------------------------------------------------------

There is in truth, neither rising not setting for the sun, for it is always these terms (of rising and setting) merely imply his presence and disappearance
--Vyasa (Post-Vedic period),  Vishnu Purana, Book 2, Chapter 8, Sloka 15,

The Sun holds the earth from all sides with (his) rays.

Yajur-Aaranyakam, Prasnah 1 , ANuvakah 8 , Vargah 3. (Vedic Period)

The Sun holds the earth and the celestial region. The Sun is the attracting power.

Yajur-veda, Taittiya-Samhita, Kanda 3, Prapaatakah 4 , Anuvaaka10, Manthra 34. (Vedic peiod)

Western Reference
------------------------
Copernicus (1473 - 1543), a Polish astronomer, published in his book “De reveloutionionibus Orbium Coelestium” in 1543 AD, the theory that the sun is the center of the universe and that other planets revolve around it. This is considered a defining moment in the history of science.

Courtesy
Bharatiya Bouddhik, Sampada.
Copyright
Samskrita Bharati.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இவ்வுலகில் !

எத்தனை படைப்பு ! எத்தனை விந்தை !! எத்தனை கேள்வி !!!

பரிணாமத்தில் தான் மனிதன் உருவானனா?
ஆண் பெண் என்ற பிரிவினையும் சேர்ந்துதான் தோன்ற வேண்டுமா? இவர்கள் மற்றும் ஒரு உயிருக்கு வித்திட வேண்டுமா? அவ்வுயிர் தாயின் கருப்பையில்தான் வளர வேண்டுமா? வளரும்போதே உணவும், தொப்புள்கொடியும் அவசியமா? 10 மாதங்கள்தான் கருவறை வாசம் தேவையா? பிறந்த உயிர்க்கு சுவாசம் தேவையா? பிறந்தபோதே தாய்க்கு பால் சுரக்க வேண்டுமா? சில மாதங்களுக்கு பின் தான் திட உணவு வேண்டுமா? தாகம் கூட அவசியமா? இவைகளின் தேவைக்கேற்ப காற்றும், நீரும், மரமும், செடியும், கொடியும் முன்னரே இருக்க வேண்டுமா? சில காலம் கழிந்துதான் அறிவு வளர்ச்சி பெற வேண்டுமா ? அறிவில் ஏற்ற தாழ்ச்சி வேண்டுமா ? உணர்வும் உணர்ச்சியும் இருக்க வேண்டுமா? வாழ்வில் பருவங்கள் வேண்டுமா? பருவத்தில் முதுமை வேண்டுமா ? முதிர்ச்சியில் தளர்ச்சி வேண்டுமா? முதிர்ந்தபின் மரணம் வேண்டுமா?  எதனை கோடி ஒற்றுமை இந்த படைப்பில்! இவற்றில் ஒன்று இல்லாமல் போனாலும் வாழ்வு இல்லை என்று இருக்கோம் போது, இத்தனை நியதியும் ஒற்றுமையும் ஒரு சேர இருக்கும் இவைகளை தான்தோன்றி என்று எண்ணவும் முடியுமோ?

இவைகளை பார்த்தல், தீர்மானிக்கப்பட்டு நிர்மாணிக்க பட்டவை என்று தான் தோன்றும் , ஆராய்ந்த எவர்க்கும்! ஐன்ஸ்டீன் முதல் அப்துல்கலாம் வரை, அறிவியலை அறிந்து, படைப்பை உணர்ந்த பலர், படைப்பையும் படைப்பாளியையும் நம்பும் பொது, ஓரளவே வளர்ச்சி பெற்ற, முழுமை அடையாத சில அறிவியல் ஈடுபாடு உடையவர்களும்,  அறிவியல் வாசனையே அற்ற சில பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிகொள்ளும் பெயர் பொருத்தமற்றவர்களும், இத்துணை அழகு வாய்ந்த படைப்பையும்  ஆராயாமல் தான்தோன்றி என்கிறார்கள்.

இன்பம் வரும்போது, தன் முயற்சி என்று சொல்பவர்கள், துயர்வரின் இறைவன் எங்கே இருக்கின்றான் என்று நாகூச்சமற்று வினவுகிறார்கள்.

இத்தனையும் படைத்து, அடிமையக்காமல் முழு சுதந்திரம் அளித்த அவன் எத்துனை கருணை வாய்க்கபெற்றவன். பெற்ற சுதந்தரத்தை தவறாக பயன்படுத்தி ஒருவரை ஒருவர் ஏய்த்தும் மாய்த்தும் வாழ்க்கை நடத்தும் நமது கூட்டமோ , நடப்பவைகளை பார்த்தல் இறைவன் இல்லை என்று தான் தோன்றுகிறது , என்று இயம்புகிறது!!

இறைவா ! எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இவ்வுலகில் !!!

- தமிழ்தொண்டன்.