Monday, January 10, 2011

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இவ்வுலகில் !

எத்தனை படைப்பு ! எத்தனை விந்தை !! எத்தனை கேள்வி !!!

பரிணாமத்தில் தான் மனிதன் உருவானனா?
ஆண் பெண் என்ற பிரிவினையும் சேர்ந்துதான் தோன்ற வேண்டுமா? இவர்கள் மற்றும் ஒரு உயிருக்கு வித்திட வேண்டுமா? அவ்வுயிர் தாயின் கருப்பையில்தான் வளர வேண்டுமா? வளரும்போதே உணவும், தொப்புள்கொடியும் அவசியமா? 10 மாதங்கள்தான் கருவறை வாசம் தேவையா? பிறந்த உயிர்க்கு சுவாசம் தேவையா? பிறந்தபோதே தாய்க்கு பால் சுரக்க வேண்டுமா? சில மாதங்களுக்கு பின் தான் திட உணவு வேண்டுமா? தாகம் கூட அவசியமா? இவைகளின் தேவைக்கேற்ப காற்றும், நீரும், மரமும், செடியும், கொடியும் முன்னரே இருக்க வேண்டுமா? சில காலம் கழிந்துதான் அறிவு வளர்ச்சி பெற வேண்டுமா ? அறிவில் ஏற்ற தாழ்ச்சி வேண்டுமா ? உணர்வும் உணர்ச்சியும் இருக்க வேண்டுமா? வாழ்வில் பருவங்கள் வேண்டுமா? பருவத்தில் முதுமை வேண்டுமா ? முதிர்ச்சியில் தளர்ச்சி வேண்டுமா? முதிர்ந்தபின் மரணம் வேண்டுமா?  எதனை கோடி ஒற்றுமை இந்த படைப்பில்! இவற்றில் ஒன்று இல்லாமல் போனாலும் வாழ்வு இல்லை என்று இருக்கோம் போது, இத்தனை நியதியும் ஒற்றுமையும் ஒரு சேர இருக்கும் இவைகளை தான்தோன்றி என்று எண்ணவும் முடியுமோ?

இவைகளை பார்த்தல், தீர்மானிக்கப்பட்டு நிர்மாணிக்க பட்டவை என்று தான் தோன்றும் , ஆராய்ந்த எவர்க்கும்! ஐன்ஸ்டீன் முதல் அப்துல்கலாம் வரை, அறிவியலை அறிந்து, படைப்பை உணர்ந்த பலர், படைப்பையும் படைப்பாளியையும் நம்பும் பொது, ஓரளவே வளர்ச்சி பெற்ற, முழுமை அடையாத சில அறிவியல் ஈடுபாடு உடையவர்களும்,  அறிவியல் வாசனையே அற்ற சில பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிகொள்ளும் பெயர் பொருத்தமற்றவர்களும், இத்துணை அழகு வாய்ந்த படைப்பையும்  ஆராயாமல் தான்தோன்றி என்கிறார்கள்.

இன்பம் வரும்போது, தன் முயற்சி என்று சொல்பவர்கள், துயர்வரின் இறைவன் எங்கே இருக்கின்றான் என்று நாகூச்சமற்று வினவுகிறார்கள்.

இத்தனையும் படைத்து, அடிமையக்காமல் முழு சுதந்திரம் அளித்த அவன் எத்துனை கருணை வாய்க்கபெற்றவன். பெற்ற சுதந்தரத்தை தவறாக பயன்படுத்தி ஒருவரை ஒருவர் ஏய்த்தும் மாய்த்தும் வாழ்க்கை நடத்தும் நமது கூட்டமோ , நடப்பவைகளை பார்த்தல் இறைவன் இல்லை என்று தான் தோன்றுகிறது , என்று இயம்புகிறது!!

இறைவா ! எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இவ்வுலகில் !!!

- தமிழ்தொண்டன்.

No comments:

Post a Comment