அன்று திருவாரூரில் தான் வழங்கிய தவறான தீர்ப்பால், செங்கோல் வளைந்தபோது , மனுநீதி சோழன் தான் முற்பிறவியில் என்ன பாவம் செய்தேனோ என்று அழுது புலம்பி தவிக்கிறான். அவர் காலத்து சேக்கிழார் பெருமான் தனது திருத்தொண்டர் புராணம் என்றழைக்கப்படும் பெருய புராணத்தில் இந்த வரலாறு விளக்குகிறார்.
கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிகாலத்தில்(19 ஆம் நூற்றாண்டு) , அவர்களால் ஏவப்பட்ட ஜமின்தார்களின் கொடுங்கோல் ஆட்சி தமிழகத்தில் நிலவியது . அந்த சமுகச் சூழலில் பெரிய புராணத்தை தழுவி இராமலிங்க அடிகள் 'மனுமுறை கண்ட வாசகம்' என்ற நூலை 1854 ஆம் ஆண்டில் அச்சிட்டு வெளியிட்டார். அந்த நூலில் மனுநீதிச் சோழன் முற்பிறவியில், தான் செய்த பாவங்களாக சிலவற்றைப் பட்டியலிடுகிறான். அது நீதியையும், வள்ளலார் காலத்து நெறிமுறைகளையும் அழகாக எளிய செய்யுளில் அமைந்து நம்மை நெறிபடுதுகிறது.
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ! (8)
மண்ணோரம் பேசி வாழ் வழித்தேனோ! (9)
உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ! (10)
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ! (11)
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! (12)
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ! (13)
வரவுபோக்கொழிய வழியடைத்தேனோ! (14)
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ! (15)
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ! (16)
இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ! (17)
கோள்சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ! (18)
நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ! (19)
கலங்கியொளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ! (20)
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ! (21)
காவல்கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ! (22)
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ! (23)
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ! (24)
குருவை வணங்கக் கூசி நின்றேனோ! (25)
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ! (26)
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ! (27)
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ! (28)
பக்ஷயைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ! (29)
கன்றுக்குப்பாலுட்டாது கட்டி வைத்தேனோ! (30)
ஊன்சுவையுண்டு உடல் வளர்த்தேனோ! (31)
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ! (32)
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ! (33)
குடிக்கின்ற நீருள்ள குளந்துர்த்தேனோ! (34)
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ! (35)
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ! (36)
பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ! (37)
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ! (38)
சிவனடியாரைச் சீறிவைதேனோ! (39)
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ! (40)
சுத்த ஞானிகளைத் துஷணஞ் செய்தேனோ! (41)
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ! (42)
தெய்வமிகழ்ந்து செருக்கடைந்தேனோ! (43)
என்ன பாவம் செய்தேனோ! இன்ன தென்றறியேனே! (44)
என்ன பாவம் செய்தேனோ! என்ன பாவம் செய்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ!என்ன பாவம் செய்தேனோ!
இப்படி நீதிக்கு பெயர் போன திருவாரூர் மண்ணில் பிறந்த இன்றைய திராவிட கழக தலைவர், மனுநீதி எதையெல்லாம் தன் பாவமாக புலம்பிநானோ, அத்தனையும் மொத்தமாய் செய்து ஆட்சியை புசிக்கிறார்கள்! எத்துனை மாற்றம் இறைவா!
கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிகாலத்தில்(19 ஆம் நூற்றாண்டு) , அவர்களால் ஏவப்பட்ட ஜமின்தார்களின் கொடுங்கோல் ஆட்சி தமிழகத்தில் நிலவியது . அந்த சமுகச் சூழலில் பெரிய புராணத்தை தழுவி இராமலிங்க அடிகள் 'மனுமுறை கண்ட வாசகம்' என்ற நூலை 1854 ஆம் ஆண்டில் அச்சிட்டு வெளியிட்டார். அந்த நூலில் மனுநீதிச் சோழன் முற்பிறவியில், தான் செய்த பாவங்களாக சிலவற்றைப் பட்டியலிடுகிறான். அது நீதியையும், வள்ளலார் காலத்து நெறிமுறைகளையும் அழகாக எளிய செய்யுளில் அமைந்து நம்மை நெறிபடுதுகிறது.
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ! (8)
மண்ணோரம் பேசி வாழ் வழித்தேனோ! (9)
உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ! (10)
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ! (11)
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! (12)
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ! (13)
வரவுபோக்கொழிய வழியடைத்தேனோ! (14)
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ! (15)
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ! (16)
இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ! (17)
கோள்சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ! (18)
நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ! (19)
கலங்கியொளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ! (20)
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ! (21)
காவல்கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ! (22)
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ! (23)
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ! (24)
குருவை வணங்கக் கூசி நின்றேனோ! (25)
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ! (26)
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ! (27)
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ! (28)
பக்ஷயைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ! (29)
கன்றுக்குப்பாலுட்டாது கட்டி வைத்தேனோ! (30)
ஊன்சுவையுண்டு உடல் வளர்த்தேனோ! (31)
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ! (32)
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ! (33)
குடிக்கின்ற நீருள்ள குளந்துர்த்தேனோ! (34)
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ! (35)
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ! (36)
பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ! (37)
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ! (38)
சிவனடியாரைச் சீறிவைதேனோ! (39)
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ! (40)
சுத்த ஞானிகளைத் துஷணஞ் செய்தேனோ! (41)
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ! (42)
தெய்வமிகழ்ந்து செருக்கடைந்தேனோ! (43)
என்ன பாவம் செய்தேனோ! இன்ன தென்றறியேனே! (44)
என்ன பாவம் செய்தேனோ! என்ன பாவம் செய்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ!என்ன பாவம் செய்தேனோ!
இப்படி நீதிக்கு பெயர் போன திருவாரூர் மண்ணில் பிறந்த இன்றைய திராவிட கழக தலைவர், மனுநீதி எதையெல்லாம் தன் பாவமாக புலம்பிநானோ, அத்தனையும் மொத்தமாய் செய்து ஆட்சியை புசிக்கிறார்கள்! எத்துனை மாற்றம் இறைவா!